இச்....
மௌனம்
ஒட்டிக்கொள்கிறது இன்பப்பிசுபிசுப்பு
நச்சென்ற சுவை
இச்...இச்...
மூச்சுப் பிரளயத்தின் ஆராதனை
உதடுகளின் திரையைக் கிழித்தெறிந்தாய்
உயிரின் சாம்பல் காலடியில் வீழ
இதழ்ப் பிளவுகட்குள்
நினைவுகளின் தூசி
இச்..இச்...இச்...
விழிகளை மெல்ல மூடி
கன்னங்களை அர்ச்சித்து விட்டு நகர்கிறாய்
தகனம் வியர்க்கும் வெயிலை
அள்ளிப் பூசிக்கொள்கிறேன் உடலெங்கும்
அரவமில்லாப் பொழுதொன்றில்
தப்பிய வார்த்தைகளை சாகடிக்கத் தயாரானாய்
இனி நான்காவது முத்தம்.....
No comments:
Post a Comment