துளிகளின் சத்தத்துடன் இசைகிறது
ஒரு புன்னகை
குழந்தையொன்றின் மிழற்றலாயும்
இறை துயிலொன்றின் நிச்சலனமாயும்
மீண்டும் ஒரு புன்னகை
மேகத்தைப் பிளந்து வருகின்றது
மண்ணின் உயிர்வாடை வீ சத்தொடங்கியது
வெம்பிய கனவுகளுடன் ஈரத்தில்
ஒட்டியும் ஒட்டாமலும்
அடுத்து மிகப்பெரிய சிரிப்பொலி
காலத்தின் துயரொலித்த பாடல்
பீரங்கி முழக்கமாயும் தோட்டா அலறலாயும்
அனாதைகளின் கூடாரத்தை நனைக்கிறது-இது
கடவுளின் கவனயீனம்
இப்போது ஒரு மௌனிப்பு
உலகமே ஈரம் சுகித்துக்கிடக்கின்றது
காலச்சக்கரத்தின் ஒருமுனையில் மரங்களின்
புத்தாண்டு
மறுமுனையில் ஏழை ஒருவனின் கண்ணீர்துளிகள்
No comments:
Post a Comment