கைகள்
தூரம் சென்றபோது
பிரிவென்றாய்
கைகள் ஒன்றாய் சேர்ந்த போதும்
இதயங்கள்
தள்ளி நின்றதே... அதை...?
புண்ணாகிப் போன
தோல்களுக்கு தான்
தெரியும்
வலியும்
வேதனையும்
மரத்துப் போன
மனங்களுக்குத் தெரியாது ..
காதலிக்கா விட்டாலும்
பரவாயில்லை பெண்ணே
கொஞ்சம்
காத்திருக்க வைத்துவிடு என்னை
உன் பிரிவுக்காகவும்
கொஞ்சம்
வாழ்ந்து போகிறேனே..!!
எட்டி எட்டி பிடிக்க
தவித்தாய் பட்டாம்பூச்சிகளை
உன் விளையாட்டை
ரசித்தபடியே
எட்ட எட்ட நின்றன அவை...!!
உன் சிரிப்பைப் பார்த்ததும்
தோன்றியது -இனிச்
சிரிப்புக்கும் சிலை ஒன்று
வைக்கலாமென்று ...!!
நீ
குட்டி போடும் என்று
கொப்பிகளுக்குள்
வைத்திருந்த
மயிலிறகிடம் கூறியிருந்தேன்
புண்ணாகிப் போன
தோல்களுக்கு தான்
தெரியும்
வலியும்
வேதனையும்
மரத்துப் போன
மனங்களுக்குத் தெரியாது ..
காதலிக்கா விட்டாலும்
பரவாயில்லை பெண்ணே
கொஞ்சம்
காத்திருக்க வைத்துவிடு என்னை
உன் பிரிவுக்காகவும்
கொஞ்சம்
வாழ்ந்து போகிறேனே..!!
எட்டி எட்டி பிடிக்க
தவித்தாய் பட்டாம்பூச்சிகளை
உன் விளையாட்டை
ரசித்தபடியே
எட்ட எட்ட நின்றன அவை...!!
உன் சிரிப்பைப் பார்த்ததும்
தோன்றியது -இனிச்
சிரிப்புக்கும் சிலை ஒன்று
வைக்கலாமென்று ...!!
நீ
குட்டி போடும் என்று
கொப்பிகளுக்குள்
வைத்திருந்த
மயிலிறகிடம் கூறியிருந்தேன்
No comments:
Post a Comment