காலமவிழ்த்தெறிந்த இளமைத் தீராரியில்
கட்டுண்டுகிடக்கின்றன
நமதிருவர் உடல்கள் ..!!
உருகி வழிந்த உணர்ச்சிகளில்
தகித்துக் கொண்டிருந்தன ஆடைகள்
தீர்வற்ற மறவா நிலையொன்றின்
ஆரம்பக்கணமொன்றில்
நீ நான் இடைவெளியற்ற ஈர்ப்பு
எத்தனை கொடியது அந்தக் கூச்சல்
வெட்கம் குழைந்த அமைதி
கட்டிப்புரண்டிருக்கும் வெம்மைக்கஞ்சிய
கட்டிலில் சிதறிக்கிடக்கும் நீண்ட இரவு
கனன்றுலர்ந்த குளிர்மாரியின்
கண்ணீர்த்துளிகள் ..
வெப்பவருடல்களை குளிர்த்தும்
முத்தத்தின் ஜீவிதம்
காமச்சுனையொன்றின்
திட்டுக்களில் சிதறிவீழ்ந்து தெறித்த
துளிகளில் ஒவ்வொன்றுமாய் சுவைத்தேன்
மறவா நிலையொன்றின் இராப்பொழுதின்
காலில் வீழ்ந்தழுதேன் கூச்சலிட்டேன்
அநித்யமற்ற இந்த நொடிக்காய் ஏங்கினேன்
இன்று போல் என்றுமிருந்ததில்லை
நலிந்த இரவுகள் அத்தனை
கொடுமையானவையில்லை
No comments:
Post a Comment