Sunday, February 3, 2013

இருளுருவம் உதிர்த்த குரங்குருவம்



பிணம் புணரும் காலத்தின் இருளுருவம் 

ஓங்கி வளர்ந்து குறியெழுப்பி நிற்கின்றது 
தகாத காலத்தின் உயிர்ச்சிதைவுகள் 
நசுக்கப்பட்ட பொழுதொன்றில் 
நெட்டுயர்ந்து நீண்டு வளர்கின்றததன் குறி 

இருளுருவத்தின் கறுப்பூறிய இதய 
மடல்களில் நீரற்ற நெடுங்கொடூரம் 
படந்துயிர்க்கிறது,
துடிப்பிழந்த யோனியின் உயிர் ரகசியங்களை 
ஆழ இறங்கி மேய்கின்றது 

சிதைந்த இடத்திலும் சீழ்படிந்த நிலத்திலும் 
சீரிய கொள்கையொன்றின் கொடிகிழிந்த 
மரணவெளியிலும்,முலை திருகி 
உடைகிழித்தெறிகிறததன் மறுவுருவம் 
ஒறுப்பூறிய அதன் சபலம் தீர்ந்த நாளொன்றில் ...

குருதி நிறம் தின்ற நரியொன்றின் போர்வைக்குள் 
ஒளிந்து கொள்கின்றததன் குரங்குருவம்

No comments:

Post a Comment