எண்ணங்களை உதறிவிட்டு
நெகிழ்ந்து படுத்திருந்தது மனம்
என்றுமில்லாதது போல் இன்றவள்
சூரியனைப் பிடித்து விரல்களுக்குள் நசுக்கியும்
நட்சத்திரங்களை உடைத்தென் கூரைமேல்
எறியவும் பழகியிருந்தாள்
என் கிழிந்த கவிதையொன்றை
வெகுவாய் மெச்சினாள் பாராட்டினாள்
அந்த நாளில் அவள் காதலன் பிரிந்ததையும்
விரகதாபத்தில் கைகள் ஊடறுத்து
உடல் மேல் ஊருவதையும் வெட்கமேயின்றி
கவிதைக்குள் அவளால் கக்கமுடிந்தது
விம்மிப் புடைத்திருந்த அவள் உடல்மேல்
தகித்துப் படர்ந்தன இச்சை நரம்புகள்
உதடுகள் வெடித்துக் கசிந்தது
உருகி வழிந்து தாள்களை நனைத்தாள்
சூடான முத்தத்தை ஆராதிக்கின்றேன்
ஒரு முறை உன் வலிமையை என்னில் திணி
உடை தாங்கிய உன் கவிதையை வெறுக்கிறேன் ...??
ஆடையைக் கிழித்தேன்
கவிதை நிர்வாணமானது
அன்பானவளே ..!!
இப்போது பிடிக்கின்றதா உனக்கென் கவிதை...?
No comments:
Post a Comment