மொழிகள் இளகியது
நாளொன்று அழகாய்ப் படர்ந்தது
விழியளைந்த பொழுதொன்றை உன்
நினைவுகள் வாங்கியது -தீயொன்று
தீர்ந்துபோனது,
கனவொன்றுன் அறிகுறிகளைப் பதிவு செய்தது
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
புதிது புதிதாய்ப் பிறந்தன
நீண்ட சோகத்தையும் நிலையான பிரிவையும்
உன் தூரங்கள் உணர்த்தின
காற்றைப் போலவே கவிதையும் காதலும்
உன்னை வாரித்தூற்றி என்னுள் எறிய .....
உயிரில் செறிந்தவளே ..!!
காதலில் தேறிய என்னுயிரை எடுத்துவருமென்
கடிதங்களை என்ன செய்வாய்...??
பகல் பொழுதுகள் நீண்ட நாளொன்றிலுன்
பதில் கடிதம் ....
பிரியமான காதல் அகதியே ...!!
உன் ஆழ்மனதில் சுதந்திரக்காற்றை
என் பேனாக்கள் குடித்தழித்து விட்டன
மன்னித்துக்கொள் ...!!
(என்னை உணரத் தயாரானாய் நீ )
No comments:
Post a Comment