நாய்களே
வீணீர் சிந்தி -என்
கோப்பையை நிரப்புங்கள்
தாகம் எடுக்கின்றது
தவறுகளின் உயிரே
மன்னித்துவிடு
சீழ் சுமையால்
தொங்கும் உடை காலே
காலிடுக்கே
உயிரே
கன்னி கிழிந்த என் மகளே
நாறும்
குப்பை வெளிகளில்
நகரும் சீனப்
புழுக்களே
நரகம் இதுவே
நிர்வாணமே
சுடலைச் சங்கே
கட்டிய கண்ணே
முட்டிய பீதியே
கக்கிய சன்னமே
இறைவ !
கண்ணுண்டு
பொன்னில்லை
பொன்னுண்டு மண்ணில்லை
மண்ணுண்டு உயிரில்லை
இது மூச்சிழப்பே..!!
No comments:
Post a Comment