Monday, January 28, 2013

துரோகினி


ஒரு கொடிய நரகத்தின் மாமிசம் செறிந்த 
இருப்பை உறுதிப்படுத்திவிடுகின்றது 
ஒரு துரோகம் 
எச்சிலால் காறி உமிழவும் 
கேவலமான சொற்களால் வசைபாடவும் 
புணர்வொன்றின் புரிதலை 
நிகழ்த்திவிடுதல் போல் உள்ளூர 
அதன் சபல வாய்கள் சிரித்துச் சிரித்து 
இருள்கின்றன 
ஒரு துரோகம் யோனிகளை அழகென்றும் 
குறிகளை அழுக்கென்றும் சொல்லும் 
வாயின் பிண அழுக்குகள் 
நீ சப்பித்துப்பிய பொய்களின் 
கடவாய் நிரம்பி வழிந்தோடும் குருதி 
விலக்கு நீர் 
மூச்சிரைத்து சர்ப்பமாய் சுருளும்வரை 
பிணைந்து காமம் புனைந்து இன்பமுற்றபின் 
நீ வேசி என்றது துரோகம் 
இருளின் காந்தப்பிடியில் எனக்கெதிலியாய் 
கிடக்கின்றன சில 
இன்னும் ஒரு மூடை துரோகம் எடுத்து வந்திருந்தாய் நீயென்
மரண ஊர்வலத்தில் 

No comments:

Post a Comment