ஒரு கொடிய நரகத்தின் மாமிசம் செறிந்த
இருப்பை உறுதிப்படுத்திவிடுகின்றது
ஒரு துரோகம்
எச்சிலால் காறி உமிழவும்
கேவலமான சொற்களால் வசைபாடவும்
புணர்வொன்றின் புரிதலை
நிகழ்த்திவிடுதல் போல் உள்ளூர
அதன் சபல வாய்கள் சிரித்துச் சிரித்து
இருள்கின்றன
ஒரு துரோகம் யோனிகளை அழகென்றும்
குறிகளை அழுக்கென்றும் சொல்லும்
வாயின் பிண அழுக்குகள்
நீ சப்பித்துப்பிய பொய்களின்
கடவாய் நிரம்பி வழிந்தோடும் குருதி
விலக்கு நீர்
மூச்சிரைத்து சர்ப்பமாய் சுருளும்வரை
பிணைந்து காமம் புனைந்து இன்பமுற்றபின்
நீ வேசி என்றது துரோகம்
இருளின் காந்தப்பிடியில் எனக்கெதிலியாய்
கிடக்கின்றன சில
இன்னும் ஒரு மூடை துரோகம் எடுத்து வந்திருந்தாய் நீயென்
மரண ஊர்வலத்தில்
No comments:
Post a Comment