Wednesday, December 26, 2012

சுவடுகள் ....

















சூடான தேநீர் கோப்பையிரண்டு
நம் உதடுகளை சுள்ளிட்ட மாலை

நமதிருவர்
சொற்களும் பிளந்தறுந்து
வீழ்ந்த அதே மாலை

அந்த ஒற்றை வார்த்தையையும்
உன் உதட்டின் பாதியையும்
கட்டிலருகிருந்த இராவிளக்கின்
மேசையின் ஓரத்தில் விட்டுச்
சென்றுகொண்டிருந்தாய்

எங்கே செல்கின்றாய்
நம் வியர்வையில் குளித்து
ஈரமாகிய மெத்தையினோரம்
சத்தமேயில்லாமல்
துடித்துக் கொண்டிருக்கும்
உணர்வொன்றை விட்டு ...??

குளிரேறிய காலை
வெளியொன்றில் ...இராப்பிழைகள்
முடிய காலைச்சூட்டை
ரசித்தபடி கைகள் வைக்கும்
யன்னல் கம்பிகளில் தொங்கியவுன்
வெட்கத்தை விட்டு

உன் முத்தஈரம்
உலராமல் இன்னும் கொஞ்சம்
நனைந்தும் மீதி நரைத்துமாய்
சோகத்துளியொன்றை
சிந்திடும் மீசையின்
கனவொன்றை விட்டு ...!!

நிலைக்க்கண்ணாடி மூலைச்சுவரில்
நீ எறிந்து விட்டுப் போனாய்
துடிக்கும் வார்த்தைகள் ...!!
குலைந்த உன் சீவிய
முடிப்பந்தை விட்டு ...

சரிதான் போ ..காதல் வலியின்
ரசவாதம் கவிஞனுக்குண்டு
கவிதைக்கில்லை..!!

No comments:

Post a Comment