அந்த
இருள்தோய்ந்த
நிலவொளியில்
விட்டில்களை
வதம் செய்யும்
முடிவொன்றை எடுத்திருந்தாய்
நான் ஜனநாயகம்
என்பதை உணரா
சர்வாதிகாரி -நீ
எனக்கான
சுதந்திரத்தை
மறுத்திருந்தாய்
நமக்கான
இன்பக் குவளை
நிரம்பியிருந்தது
அதிஷ்டங்களை
பருகிவிட்டு
துரதிஷ்டங்களை
விட்டுச்சென்றாய்
குவளையையும் மிச்சம்
வைக்கவில்லை நீ
முத்தம் தருகையில்
விசேடமாகத் தெரிந்த
உன் உதடுகளில்
விஷமம் தடவப்
பட்டிருந்தது
மீண்டும் -நடுவானில்
அந்த
உடைந்த நட்சத்திரங்கள்
நமக்கான
இடைவெளியை
மின்னியபடி...!!

No comments:
Post a Comment