மண்மேல் காதல்
கொண்ட மழைத்துளியொன்று
உன் மேல்
ஆசை கொண்டு
அந்தரத்தில் நின்றது
கூந்தல் வழி வீழ்ந்த
குதூகலத்தில்
ஆடைகளுக்குள்
புகுந்து
ஆவி உயிர்த்தது
குழந்தையாய் குதித்தாய் -உன்
கைகாளால் உன்னையேன்
இறுக்கிக் கொண்டாய்
உன் மார்புக்குள்
மழைத்துளி ...??
துளித் துளியாய்
சிந்தியது -அதன்
உயிர் வலி....
உன் கை அளைதலில்
வெட்கம் கொண்டும்
மெய் நுழைதலில்
சிக்கிக் கொண்டும்
சாகின்றது ...!!
அந்த பேய்மழை
அணைக்கவந்த
பூமழை நீ
மழை மேல்
துமிக்கின்றாய்
கூச்சங்களை ...!!
மழைத்துளியொன்று
சாகின்றது -உன்
வெப்பக்
காதல்
வாழ்கின்றது ...!!

No comments:
Post a Comment