Friday, September 21, 2012

ஐந்தடி அதிசயம்

 

யாரிவள் என்று 
ஊரேதும் தெரியாத 
பெண்ணிடம் ...!!
போரொன்று தொடக்கினேன் 
மனதிடம்-காதல் 
வேர்கொண்டு நின்றது 
விருட்சமாய் ...!!

மொத்தமாய் இருப்பாள்
என்னுள் 
மொத்தமுமாய் இருப்பாள் 
கூந்தல் விரி கூந்தல் 
கும்மிருட்டின் 
வழித்தோன்றல் ...!!

மென்மையாய் நகரும் 
பாதங்கள் 
தொடும் பாதைகள் 
குன்றும் குழியுமல்ல
காதலும் கவிதையும் 

கன்னத்தில் பருவொன்று
சிவந்திருக்கும் -அதை 
முப்புரங்கள் எரித்த 
கனல் என்பேனா ?இல்லை
மூன்றாம் பிறை 
ஒளிரும் அனல் என்பேனா..?

யாதென்று 
சொல்வேன் அவள் அழகை
சிரிக்காமல் சிரிக்கும் 
அவள் உதடுகள் 
ஆபிரிக்க தேச 
வறுமை உணர்த்தி என்பேனா ?

அவள் சுடிதார்த் 
துப்பட்டா முனைகளில் 
துடிக்கும் என் இதயத்திடம் 
சில கேள்விகள் 

உயிர் வதை செய்தல் 
ஆண்மை கொல்லல்
மனம் 
உடைத்தல் 
அந்த சைவ அழகியிலும் 
இத்தனை
வன்முறை உள்ளதா ?

மஞ்சள் நிறத் 
தாஜ்மகால் 
என்ன செய்வாளவள் 
ரசித்தவன் கண்களை 
புசித்து விடுவாளோ 
ஒரு வேளை...??

No comments:

Post a Comment