அவள் சமைக்கின்றாள்
என்னை
நான் உணவு
தயாராகின்றது -அவள்
வாய்வழி வெளிவந்த
சுடுவார்தைகளால்
வறுக்கப்படுகின்றேன்
நளபாக
உச்ச ஸ்தாயியிலிருந்து
நான் எழு சுவை
உணவாய்
வெளிவருகின்றேன் ...!!
அவள் கைப்பக்குவத்தில்
பருக்கைகளாய்
ஒட்டிக் கொண்டு
மௌனமாகின்றேன் -
அவள் விரலிடை
புசித்து புசித்து
நான் சுவை தின்கின்றேன்...!!

No comments:
Post a Comment