பிணியானோம்....
மரணப்படலையின்
இறுதிச் சலாகை வரை
தொங்கியதெனதுயிர்
நான் உன்னிடம்
விடைபெறுவதற்கும்
நீ என்னிடம் -வினா
தேடுவதற்கும் முயற்சித்துக்
கொண்டிருந்தாய் ..!!
என் இறுதிக்கால இசையின்
நான் முழங்கிய கணமொன்றில்
நீ மீண்டும்
எனதுயிரை வாசிக்கத்
தொடங்கியிருந்தாய் ..!!
உன் இடைநழுவிய பாவாடை
வழி அனுமானிக்கப்படிருந்தது-நீ
இழந்த நாட்களும்
அடைந்த வலிகளும்
பிணவறை வழி
நகர்கின்றதென் நான்குசில்லு
மரணவண்டி -நாதியற்று
நாறுகின்றேன் நான்
சவக்கூடம் எங்கும்
சாவை நோக்கிய சபதங்களை
எறிகின்றேன் ....
மரணமே....
மறுபிறப்பே....உதிர்ந்த
சிறகே
உடைந்த கிளையே...!!

No comments:
Post a Comment