இராக்குழந்தை
வானச்சேலையின்
முந்திவிலக்கி
பூமித்தாயின்
பால்குடிக்க
வருகிறது மழலை
தாய்மையின்
துடிப்புகளில் -விசிறப்பட்ட
பால்வகை
மேகக்கூட்டங்களை
அள்ளிப் பருக்கிக்
களைப்படைந்த நொடியில்
சுவாச அந்தத்தின்
உச்ச முடிப்புகளில்
தெளிந்த
வியர்வைத் துளிகளாய்
நட்சத்திரங்கள்
இருண்ட கானத்தின்
விழிப்பரப்பில்
நாதம் பிறக்கின்றது
எச்சில் உமிழ்தலின்
ஊற்றெடுப்பில்
தண்மை வழிகின்றது ...!!!

No comments:
Post a Comment