Tuesday, August 21, 2012


நானாக்கப்பட்டிருக்கும் நீ

நீயாக்கப்பட்டிருக்கும் 
ஒவ்வொரு உணர்வுகளும் 
என்னை 
ஈர்த்துக் கொண்டிருக்கின்றன 
உனது 
ஒவ்வொரு அசைவிலும் 
இசைவிலும் 
நானாக்கப்பட்டிருக்கின்றேன் 

கடிகார முட்களிலும் 
அது அலறும் 
அலார ஓசையிலும் 
நீயாக்கப்பட்டிருக்கின்றாய் 
நேரக்கடக்கைகளில் 
நான்
அதிர்வுகளைப் 
புசித்தபடி மௌனிக்கின்றேன்

வாழ்வின் 
ஏதோ மூலையிலும் 
பயண வளைவுகளிலும் 
நீயாக்கப்பட்டிருந்தாய் 
வழி விடுதலிலும் 
முன்னேறிப் 
பின்னேறுதலிலும் 
வழிப்போக்கனாகிய
அனுபவங்களுக்காய் 
நான் பிரயாணப்படுகின்றேன் ...!!

No comments:

Post a Comment