Wednesday, August 22, 2012


எனதுகளின் குறிப்பு 

எனதுகளில் வரையப்பட்ட 
அவள் ஓவியங்கள் 
வித்தியாசமானவை 
புள்ளிகள் கோடுகளின்றிய 
பிரமாண்டங்களால்
தோய்க்கப்பட்டவை 

எனதுகள் மரணிப்புகளில் 
மாய்க்கப்பட்டவை
இருண்டவை
இனிமை தராதவை 
ரணங்கள் 
கணம் கணமாய் வாங்கியவை 

எனதுகள் 
எனக்கானவையல்ல 
அவளுக்காக எழுதப்பட்டவை 
மௌனத்தால் 
சிதைக்கப்பட்டவை 
வலிகள் விதைக்கப்பட்டவை 

அவளியல் அறியாத 
எனதுகள் பாவப்பட்டவை 
கண்ணீரில் 
மூழ்கிச் செத்துப் போன 
அவள் நினைவுகளால் 
அனாதையாக்கப்பட்டவை 

இருந்தும் 
எனதுகள் உனதுகளாக்கப்பட்டவை...!!

No comments:

Post a Comment