தோலோடு என் கால்கள்
இடறக் கண்டேன் -கண்ணீரை
மீண்டும் உப்புச் சுவாசத்தில்
தெளிக்க முயன்றால் மிஞ்சுவது
நீ கீச்சிட்ட பொழுதுகள்
தேடவும் முடியா
ஓடவும் முடியா பேரண்டத்தின்
இருண்மை நிலையது ..உன் பிரிவு
முன்னெல்லாம் காற்று காற்றாய் வீசும்
நிச்சலனம் நிறைந்த ராவொன்றில்
உன் தூக்கங்கள் கதை பேசும்
நட்சத்திரங்களை எண்ணியபடியே
என் கரங்களுக்குள் புதைத்தவுன்
குறண்டிய விரல்களை
உதைக்கின்றது காலம்
என் மகளே..!!
இப்போதெல்லாம் என்னை நோக்கி
கண்ஜாடை பேசுவதில்லை
உன் அன்னை ..!!
No comments:
Post a Comment