Monday, February 4, 2013

உயிரைப் போலொரு வலி


காதலெனும் புத்தகத்தை இரவல் வாங்கிப் 
படிக்க வந்தவள் போல் நீ 
உன் வேதனை நிரம்பி வழியும் 
திருவிழாக் கூட்டம் போல் நான் 
நீயே கடவுளாகிறாய் 
உயிராகிறாய் 
பேருருவாய் வளர்ந்து எனை தின்கிறாய் 

வெற்று உயிராகி நானே 
காவுகொள்ளென்று காத்திருக்கிறேன் 
சொற்கொலை 
மண்டியிட்டு முகம் புதைத்து 
அதே கூட்டத்தில் நானுமிருக்கிறேன் 
நீயுமிருக்கிறாய் அதுவுமிருக்கிறது 

அதுவென்றால் எது ?
இது ....
 

No comments:

Post a Comment