காதலெனும் புத்தகத்தை இரவல் வாங்கிப்
படிக்க வந்தவள் போல் நீ
உன் வேதனை நிரம்பி வழியும்
திருவிழாக் கூட்டம் போல் நான்
நீயே கடவுளாகிறாய்
உயிராகிறாய்
பேருருவாய் வளர்ந்து எனை தின்கிறாய்
வெற்று உயிராகி நானே
காவுகொள்ளென்று காத்திருக்கிறேன்
சொற்கொலை
மண்டியிட்டு முகம் புதைத்து
அதே கூட்டத்தில் நானுமிருக்கிறேன்
நீயுமிருக்கிறாய் அதுவுமிருக்கிறது
அதுவென்றால் எது ?
இது ....
No comments:
Post a Comment