Wednesday, December 26, 2012

சர்ச்சைக்குரியவை .....

புதைந்த இடத்திலிருந்து 
புழு ஊரும் இடம் வரை....

கண்ணில் இரண்டு பூரானும்
நூறு கவலைகளும்

மூக்கில் மூன்று எறும்புகளும்
நீர்வடிந்து காய்ந்த சுவடுகளும்

உதட்டோரம் சாம்பலான புன்னகையும்
சகதியான சுக்கிலமும்

முலைவழி பிளந்த நரம்புகளும்
சீழிரத்தச் சதையிழந்த மானமும்
கற்பும் ....

இடையின் கீழ்
மொய்க்கும் இலையான் கூடும்
இறந்த மனிதமும்
இறக்காத உண்மைகளும்

விடியாது...புலராது...மலராத
மீண்டும்
புதைந்த இடத்திலிருந்து.....

No comments:

Post a Comment