Sunday, September 30, 2012


மரணம் தின்கின்றாய்...!!

ஈமவிளக்கொன்றின் கணப்பொழுதில் 
எரிகின்றதுன்னுயிர் 
இறுமுறியின்றி சாம்பலான 
உன் வீரப்பாடல்களை 
காற்றில் எறிகின்றாய்

பிரேதக்காட்டின் நிலப்பரப்பில் 
உன் உணர்வுகளின் 
குறட்டை ஒலிக்கின்றது 
புண்ணீர் கலந்த உன் 
புதைகுழியெங்கும்-இனத்தின் 
கண்ணீரின் உப்புத்துகள்கள் 

பிணநரிக்கூடோன்று 
திறக்கின்றது 
சதைமணம் புசித்துச்-
சிதைக்கப்படுகின்றாள் -உன் சோதரி
சகித்து சகித்துப்
பாரிய புண்ணாகின்றாய் நீ 

மீண்டும் 
வெள்ளிடைப்பட்ட-உன் 
உணர்சிகளை -காலத்தின் 
ஏப்பத்தில் உணர்கிறாய் நீ ..!!

No comments:

Post a Comment