Tuesday, August 21, 2012


பனி நிலவு

தீ நிறைந்த
பகல் பொழுதில்
நெருப்பு வானில்
சொட்டுச்....
சொட்டாய்ப்...
குளிர் பொழிகின்றாய்

தளிர் வெளித்த
மலர்ச் செடிக்குள்
மகரந்தத்
துளிகளாய்
மனம் புதைக்கின்றாய்

பச்சைப் போர்வை
களைந்து
விழித்த
மொட்டுக்களாய்
இதழ் விரிக்கின்றாய்

சிறுகச்
சிறுகக் கரைந்து
நுழைந்து
என்னுள்
சர்க்கரை கானம்
இசைக்கின்றாய்

அசை தென்றலை
அணைத்துப்
பிழிந்து
முகம் துடைகின்றாய்

பகல் விழிப்பில்
உறக்கம் தந்து
பனி நிலவாய்
உறைகின்றாய் ...!!!

No comments:

Post a Comment