முட்களின் கையொப்பம்
பாதங்களில் வரையப்பட்டது
கரடு முரடுகளில்
வழிப்போக்கன்
பிறந்தான்
தென்றல்
கீற்றுகளின் குளுகுளுப்பில்
பாலை பூத்தது
குருதி மலர்கள்
பள்ளங்களில்
புதைக்கப்பட்டன ...
அந்த முடிவிலாப்
பாதை வழி
நான் பருவமடைந்தேன்
கூலாங்கற்களாக...!!

கதவடைப்பில்
ஆன்மா அடைபட்டது
No comments:
Post a Comment